search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிதி ராவ் ஹிடாரி"

    காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதி ராவ் தனக்கு வந்த காதல் கடிதத்தை தனது அம்மாவிடம் காட்டி பெருமைபட்டதாக கூறியுள்ளார்.
    மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதி ராவ். பாலிவுட், கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தனது காதல் அனுபவங்கள் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் 5ம் வகுப்பு படித்தபோது எனக்கு முதன்முதலாக காதல் கடிதம் வந்தது. அப்பொழுது எனக்கு வெறும் 9 வயது தான். என் சீனியர் ஒருவர் இரண்டு பக்கங்கள் எழுதியிருந்தார். அந்த கடிதம் கிடைத்த வேகத்தில் என்னை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டனர். அந்த கடிதத்தில் நான் ரொம்ப அழகாக உள்ளேன் என்று ஏதேதோ எழுதியிருந்தது.



    வீட்டிற்கு சென்ற உடன் அம்மாவிடம் அந்த கடிதத்தை பெருமையாக காட்டினேன். எனக்கு 9 வயசு தானே. அதனால் அந்த கடிதம் பெரிதாக தெரியவில்லை. எனக்கு 21 வயதில் திருமணம் நடைபெற்றது. எனக்கு எப்படி டேட்டிங் செய்வது என்று தெரியவில்லை என நினைக்கிறேன். அதன் பிறகு படங்களில் நடிக்கத் துவங்கினேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்தியாவிலும் ‘மீ டு’ பற்றி பல்வேறு புகார்கள் வெளியாகி வரும் நிலையில், தானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். #AditiRaoHydari #MeToo
    மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதிராவ் ஹிடாரி. தற்போது உதயநிதியுடன் சைக்கோ படத்திலும், தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கிலும் கவனம் செலுத்துகிறார். 

    அதிதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை பற்றி வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார்.

    ’என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அதனால் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். அட்ஜஸ்ட் செய்வது பற்றிய வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு தெரியாது. அது எல்லாம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. ஒரே ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

    நான் அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவையில்லை என்று நினைத்து நடையை கட்டிவிட்டேன். அதன்பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு வேலை இல்லை. 
    பாதிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து தைரியமாக வெளியே பேச வேண்டும். இல்லாவிட்டால் பணம் வாங்கி இருப்பார் என்றோ, மிரட்டி பணியவைத்து இருப்பார்கள் என்றோதான் வெளியே பேசுவார்கள். 

    நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய வேண்டும். இப்போது ‘மீ டு’ இயக்கம் வேறு திசையில் திரும்பி கொண்டிருக்கிறது. இவ்வாறு அதிதிராவ் கூறினார். #AditiRaoHydari #MeToo

    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அதிதி ராவ் ஹிடாரி பாடல் ஒன்றை பாடுகிறார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒரு பாடலை அதிதி ராவ் பாடுவதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    வசந்த பாலன் இயக்கத்தில் நான் நடித்து, இசையமைக்கும் ஜெயில் படத்தின் மூலம் திறமைமிக்க அதிதி ராவ் ஹிடாரி தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். காத்தோடு என தொடங்கும் இந்த டூயட் பாடலில் நானும், அதிதியும் இணைந்து பாடுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 


    ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
     
    பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தில், அதிதி ராவ் நாயகியாக நடிக்கும் நிலையில், இயக்குநராக தனுஷ் தன்னை கவர்ந்துவிட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். #DD2 #Dhanush
    தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

    தற்போது பிரம்மாண்ட சரித்திர படம் ஒன்றை தனுஷ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல்  உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களுக்கு பிறகு அதிதி ராவ் நடிக்கும் படம் இது. தனுஷ் இயக்கத்தில் நடிப்பது பற்றி அவர் கூறும்போது, 



    ‘முன்பே ஒருமுறை தனுசுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்சினையால் அது நிறைவேறவில்லை. இப்போது அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஷாட் வைப்பது புதுமையாகவும் வேலை வாங்குவது எளிதாகவும் இருக்கிறது. ஒரு இயக்குனராக என்னை கவர்ந்துவிட்டார் தனுஷ்’ என்று பாராட்டி உள்ளார். #DD2 #Dhanush #AditiRaoHydari

    மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்துள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முன்னோட்டம். #ChekkaChivanthaVaanam #CCV
    மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

    இதில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலி கான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா உள்பட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு - ஸ்ரீகர்பிரசாத், பாடல்கள் - வைரமுத்து, கலை - ‌ஷர் மிஷ்டாராய், சண்டைபயிற்சி - திலீப் சுப்புராயன், எழுத்து - மணிரத்னம், சிவா ஆனந்த், தயாரிப்பு - மணிரத்னம், சுபாஸ்கரன், இயக்கம் - மணிரத்னம். 



    “பிரபல நடிகர்-நடிகைகள் கூட்டணி சேர்ந்துள்ள இந்த படம் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. எப்போதுமே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை கொடுப்பவர் மணிரத்னம். நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ள ‘செக்கச் சிவந்தவானம்’ அனைவரும் ரசிக்கும் எழில் கொஞ்சும் கதையாக உருவாக இருக்கிறது. இது இயக்குனர் மணிரத்னத்தின் புதிய பரிமாணமாக இருக்கும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    சமீபத்தில் வெளியாகிய இரண்டு டிரைலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ChekkaChivanthaVaanam #CCV

    செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் 2:


    செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் 1:

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் அடுத்த டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. 

    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும், படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இந்த நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் ரிலீசாக இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam  #CCVTrailer2

    பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில், நடிகை அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். #DD2 #Dhanush #AnuEmmanuel
    தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

    தனுஷ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கிறார். ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான இவர் தற்போது மீண்டும் இயக்கத்தில் களம் இறங்கி உள்ளார். அந்த வகையில் பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வருகிறார். 

    படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. இந்தப் படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 



    தற்போது இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகை அனு இமானுவேல் இணைந்துள்ளார். இவர் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அனு தமிழ் தவிர தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். #DD2 #Dhanush #AnuEmmanuel

    மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசாக இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. 

    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் ஒரு நாள் முன்னதாக ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும், படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் ரிலீசாக இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam

    பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் பலரும் படத்தில் இணைந்துள்ளனர். #DD2 #Dhanush
    தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

    இந்த நிலையில், பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்கி நடிக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஏ.சூர்யா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக அதிதி ராவ் ஹிடாரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்த படத்தின் கலை பணிகளை முத்துராஜ் மேற்கொள்கிறார். #DD2 #Dhanush

    `செக்கச்சிவந்த வானம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் தனது வெற்றியின் ரகசியம் குறித்து பேசினார். #ChekkaChivanthaVaanam #Maniratnam
    மணிரத்னம் இயக்கத்தில் அரவந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `செக்கச்சிவந்த வானம்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை நேரலையாக வாசித்து காண்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம் ‘நல்ல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் என் படங்களில் இடம்பெறுவதே எனது வெற்றியின் ரகசியம்’ என்றார்.

    அருண்விஜய் பேசும்போது ’சிம்புவுடன் பணிபுரிந்தபோது தான் அவர் எப்படிபட்டவர் என்று புரிந்தது. சிறந்த மனிதர் அவர். இந்த படத்தில் நான் இடம்பெற்றதில் எந்த அளவு மகிழ்ச்சியோ அதே மகிழ்ச்சி சிம்பு இந்த படத்தில் இடம்பெற்றதில் எனக்கு இருக்கிறது’ என்றார். ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், வைரமுத்து மூவரிடமும் இந்த கூட்டணியில் உருவான எந்த பாடல் உங்கள் ஃபேவரிட்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.



    அதற்கு ஏ.ஆர்.ரகுமான் கண்ணாளனே(பம்பாய்) பாடலையும், வைரமுத்து உயிரே(பம்பாய்) பாடலையும், மணிரத்னம் தமிழா தமிழா(ரோஜா) பாடலையும் கூறினார்கள். அதிதி ராவ் பேசும்போது ‘நான் இன்னும் தமிழ் கற்றுக்கொள்ளாதது வசதியாக போய்விட்டது. தமிழ் தெரியாததால் மணிரத்னத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது’ என்றார். சிம்பு பேசும்போது படம் பற்றி பேச மறுத்துவிட்டார். படம் பேசும் என்று மட்டும் கூறினார். #ChekkaChivanthaVaanam #Maniratnam 

    மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

    அடுத்ததாக படத்தின் இசை வருகிற 5-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை கச்சேரியும் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பவும் படக்குழு முடிவு செய்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். #CCV #ChekkaChivanthaVaanam

    மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    படத்தில் சேநாதிபதி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மாபெரும் தொழிலதிபராக வருகிறார். அவரது மூன்று மகன்கள் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு ஆகிய மூன்று பேரும் தனது அப்பாவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கின்றனர். மறுமுனையில் போலீஸ் அதிகாரியான விஜய் சேதுபதி, தனது நண்பனான அரவிந்த்சாமி மூலம் பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க நினைப்பதை மையப்படுத்தி கதை நகர்வதாக தெரிகிறது. 

    மொத்தத்தில் உனக்கு யாராவது பழைய நண்பன் இருந்தால் அவனை நம்பாதே, அப்போ யுத்தம் தான் உள்ளிட்ட காரசாரமான வசனங்களுடன் குடும்பம் மற்றும் நட்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி காதல், நட்பு, அதிரடி என அனைத்தும் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    அரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகாவும், அருண்விஜய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்பு ஜோடியாக டயானா எரப்பாவும் வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் தெறிக்கவிடும் பின்னணி இசையுடன் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் டிரைலர்  படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் கூட்டியுள்ளது. படம் செப்டம்பர் 28-ஆம் ரிலீசாக இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam

    செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர்:

    ×